Police with bloom

லத்தியை வைத்துவிட்டு நம் உயிர்காக்க துடைப்பத்தை எடுத்த அதிகாரி!

புதுச்சேரியில், நேர்மையான இன்னொரு சகோதரி!

இதே சாலையில் இரு உயிர்களை கடந்த 30 நாட்களில் இழந்திருக்கிறோம்.

எத்தனையோ நபர்கள் வழுக்கி விழுந்தும், படுகாயமடைந்தும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இருந்திருக்கிறார்கள்.

இதை அரசு (பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை) உணர முடிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இவரை போன்ற காவல் தெய்வங்கள் நிச்சயம் உணர்ந்திருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரத்திற்குள் பெய்த மழையில், மேலும் பாதிப்படைந்த சாலை இது. லத்தியை வைத்துவிட்டு துடைப்பத்தை கையிலெடுத்த நம் சகோதரிக்கு தலை வணங்குவோம்.

இதுபோன்ற செயல்களை அதிகம் பகிருங்கள், என் போன்ற இளைஞர்களுக்கும் வரும் தலைமுறையினருக்கு இதுதான் சிலபஸ் (syllabus)

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »