- ஆம் ஆத்மி கட்சி எப்படி தோன்றியது?
- அதன் நடவடிக்கைகள் என்ன?
- மக்களின் ஆதரவை பெற்றது எப்படி?
- அதன் சாதனைகள் என்ன?
- புதுச்சேரிக்கு ஆம் ஆத்மி கட்சி ஏன் தேவை?
- அதன் எதிர்கால திட்டங்கள் என்ன?
- அதில் ஏன் சேரவேண்டும்?
இப்படி பல கேள்விகளுக்கான விரிவான பதிவு.
- இந்தியாவில் ஊழலுக்கு எதிரான இயக்கம் முதன் முதலாக அண்ணா ஹசாரே தலைமையில் எழுச்சி கொண்டு நடந்தது, இதில் பல்வேறு சமூக அமைப்புகள் கலந்து கொண்டன.
- அதில் தற்போது டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் ஒருவர்.
- ஊழல்களை ஆவணங்களுடன், ஆதாரத்துடன், மக்களிடம் அம்பலம் படுத்தினார், காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார், இந்த உண்ணாவிரத மானது பதினொரு நாட்களை கடந்தன.
- டில்லி மாநில மக்கள் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே இந்த ஊழலுக்கு எதிரான இந்த ஆம் ஆத்மி கட்சிஇயக்கத்தை ஆதரித்தது.
- ஊழலை ஒழித்து மக்களுக்கு நேர்மையான தூய்மையான நிர்வாகத்தை அளிக்க முதல்கட்ட நடவடிக்கையாக கையில் துடைப்பத்தை எடுத்து ஊழலை துடைத்தெறிய, மாநிலத்தை சுத்தம் செய்ய, எங்கள் துடைப்பம் சின்னத்தை ஆதரியுங்கள் என்ற கோரிக்கை யோடு பல வாக்குறுதிகளையும் அளித்தது ஆம் ஆத்மி கட்சி.
- அதுவரை ஆட்சி கட்டிலில் அமர்ந்து மக்களை வாட்டி வதக்கிய காங்கிரஸையும் பாஜகவையும் மக்கள் ஆதரவுடன் ஓட ஓட விரட்டி பணநாயக அரசியலுக்கு முடிவு கட்டியது ஆம் ஆத்மி கட்சி.
- ஆட்சிக்கு வந்ததும் மக்கள் நலனிலும் மாநில வளர்ச்சியிலும் முழு கவனம் செலுத்தியது ஆம் ஆத்மி கட்சி.
- பாராளுமன்றத்திலும் நான்கு உறுப்பினர்கள் நுழைந்து நாட்டின் பிரச்னைகளை எடுத்துரைத்தனர்.
- ஆட்சியின் சாதனைகளாக அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டது.
- மேம்பாலங்கள் மற்றும் இதர கட்டுமான பணிகள் குறித்த கெடு தேதிக்கு முன்னரே கட்டி முடிக்கப்பட்டது.
- மக்களுக்கு அதிகாரம் தரக் கூடிய அரசு ஊழியர்களை வேலை வாங்க கூடிய சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல் படுத்தியது
- மத்திய அரசின் நெருக்கடிகளையும் ஆளுநரின் கெடுபிடிகளையும் சட்ட ரீதியாக எதிர்கொண்டு துணிச்சலுடன் எதிர்த்து போராடி பேராண்மை மிக்க அரசாக விளங்கியது ஆம் ஆத்மி கட்சி.
- ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் ஊழல் என்பது இல்லை நேர்மையான உண்மையான ஆட்சி கண்டிப்புடன் கவனத்துடனும் நடைபெறுகிறது.
- வரி வருவாயை இரண்டு மடங்காக பெருக்கியது ஆம் ஆத்மி கட்சி.
- பல ஆண்டுகள் நிலுவையில் நின்ற மத்திய அரசின் கடனை அடைத்தது.ஆம் ஆத்மி கட்சி.
- நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், முதலில் கொடுத்தது ஆம் ஆத்மி கட்சி.
- மாசு சூழலை உலகத் தரத்தின் தொழில் நுட்ப அடிப்படையில் கட்டுப்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சி.
- விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உற்பத்தியை பெருக்க நடவடிக்கைகள் எடுத்தது. ஆம் ஆத்மி கட்சி.
- விவசாயத்திற்கு பேரிடர் காலத்தில் இழப்பு ஏற்பட்டால், நஷ்ட ஈடாக ஏக்கருக்கு ரூ 50,000 வழங்கி வருகிறது ஆம் ஆத்மி கட்சி.
- மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றி வருகிறது ஆம் ஆத்மி கட்சி.இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
- இப்படிப்பட்ட கட்சியும் ஆட்சியும் நமது புதுச்சேரிக்கு வேண்டுமா? வேண்டாமா?.
- ஆம் ஆத்மி கட்சி என்பது சாமானிய மக்களின் கட்சி என்றே பொருள்
- இது புதுச்சேரியில் தற்போது புதிய பொலிவுடனும் புதுச்சேரி மக்கள் நலனுக்காகவும் மாநில வளர்ச்சிக்காகவும் ஐந்து அம்ச திட்டங்களை முன் வைக்கிறது.
- இதற்காக பல சமூக அமைப்புகளை மக்கள் இயக்க அமைப்புகளை ஒன்று திரட்டும் வேளையில் இறங்கி உள்ளது.
கீழ் கண்ட ஐந்து அம்ச திட்டங்கள்.
- மாநில தகுதிபெறுவது.
- நிதிப்பற்றாக்குறை போக்குவது.
- உள்ளாட்சி தேர்தலை நடத்துவது.
- சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல் படுத்துவது.
- கூட்டுறவு அரசு சார்பு நிறுவனங்கள்.. தொழிற்சாலைகளை புணரமைத்து ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவது.
- அரசு துறை காலிப் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக சீனியாரிட்டி அடிப்படையில் பணியமர்த்துவது.
- இதனை முன் வைத்து கிராமங்கள்.. நகரப்பகுதிகளில் தன் பிரச்சார பயணத்தை மிக விரைவில் துவங்க இருக்கிறது…
- இதில் கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், பொருளாதார வல்லுநர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், தொழிலாளர்கள், சேர வேண்டும்.
- புதுச்சேரியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த, நம்மால் மட்டுமே முடியும்…
- ஆம் ஆத்மி கட்சி. இதற்காக, தன்னை முழு மூச்சாக அர்ப்பணித்து கொள்கிறது….
- முழுக்க முழுக்க. இதன் பணி புதுச்சேரி மக்கள் நலனுக்காகவும், மாநில வளர்ச்சிக்காகவும், இருக்கும் என்பது உறுதி.
புதுச்சேரிக்கு இப்போதைய தேவை…
* உண்மையான
* நேர்மையான..
* ஊழலற்ற..
* துணிச்சலான
* பேராண்மை மிக்க அரசு
* அப்படிப்பட்ட ஆட்சி அமைக்க, கையில் துடைப்பத்துடன் அனைத்து அழுக்குகளையும்.. குப்பைகளையும் துடைத்தெறிய வருகிறது ஆம் ஆத்மி கட்சி.
ஆதரிப்பீர்… இணைந்து செயல்பட வாரீர்….
நன்றி வணக்கம்…
கோ ராமலிங்கம்
செயற்குழு உறுப்பினர்
ஆம் ஆத்மி கட்சி
புதுச்சேரி….