இப்போது புதுச்சேரி பட்ஜெட்டுக்கு என்ன தேவை?
அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
முதலில்.
- புதுச்சேரி வளர்ச்சிக்கு, வல்லுநர்களை கொண்ட வளர்ச்சி குழு அமைக்க வேண்டும்.
- நிதிப்பற்றாக்குறை போக்க வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
- வரி வருவாயை பெருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- வீட்டு வரி, குடிநீர் வரி, கேபிள் வரி, மின்சார வரி, தொழில் வரி, சொத்து வரி, மனை வரி, ஆகியனவை புதிய கணக்கெடுப்பின்படி வரி சீரமைக்க வேண்டும்.
- வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோரின் உண்மையான கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் மட்டுமே அரசு சலுகைகளை பயன்படுத்த செய்ய வேண்டும்.
- 14 வது தீர்மானமாக, மாநிலத் தகுதி கேட்டு சட்டமன்றத்தில் அழுத்தம் திருத்தமாக தீர்மானம் போட்டதோடு விட்டு விடாமல், மாநில தகுதி பெற வேண்டும்.
- சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு அமைத்து, பிரெஞ்சு இந்திய ஒப்பந்தப்படி 100 சதவீத நிர்வாக மான்யம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- தற்போது மத்திய அரசு அளிக்கும் மான்யம், இவற்றை ஆய்வு செய்து டில்லி மூத்த வழக்கறிஞரை நியமனம் செய்து, நமது மாநில உரிமை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பஞ்சாயத்து தேர்தலை நடத்தவும், அதற்கு உண்டான நிதியை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பஞ்சாலைகள், தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலை, கூட்டுறவு நூற்பாலைகளை, புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு ஒதுக்கிய நிலத்தில், சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கடலோர பகுதி என்பதால், கடல் மட்டம் உயரும் ஆபத்து உள்ளது.இதற்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசுக்கு சிறப்பு நிதி கேட்க வேண்டும்.
- ஆடம்பர திட்டங்களில் கவனம் செலுத்தாமல், அவசியமான திட்டங்களில் கவனம் செலுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மத்திய அரசு மாநில கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்த வேண்டும்.
- வது நிதிக் குழுவில் நமது மாநிலத்தை சேர்க்க வேண்டும்.
- மத்திய உள்துறை நிதி ஒதுக்கீட்டில், அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை காலதாமதப் படுத்தாமல் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உள்நாட்டு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த கூட்டுறவு அமைப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கூட்டுறவு ஆலோசனை குழு அமைக்க வேண்டும்.
- சேவை பெறும் உரிமை சட்டம் அமல்படுத்த வேண்டும்.
- தலைமை தகவல் ஆணையர் அலுவலகம் வேண்டும்.
- ஊழலை முற்றிலுமாக ஒழிக்க, லோக் பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்..
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.