Exposure by AAPKKL

அரசு ஊழியர்களின் லஞ்சம், காலதாமதம், அலட்சிய போக்கு, சோம்பேறித்தனம், பழிவாங்கும் நடவடிக்கையை  அம்பலபடுத்துதல்.

சுமார் 70 வருடங்களாக, மக்களுக்காக வேலை செய்ய வந்த  அரசியல் தலைவர்களையும், அதிகாரிகள் எனப்படும் அரசு ஊழியர்களையும்  பொது மக்களாகிய நாம் கண்காணிக்க தவறிவிட்டோம்.

இனி, அரசியல் தலைவர்களையும், அரசு ஊழியர்களையும், நம்முடைய  கண்காணிப்பில்  வைத்திருப்பது மிக அவசியம். ஆம். ஆத்மி கட்சி, ஏற்கனேவே கண்காணித்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

அரசியல் தலைவர்களுக்கும் சரி, அரசு ஊழியர்களுக்கும் சரி, மக்களுக்கு வேலை செய்யத்தான், அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர வேறெதற்கும் இல்லை என்ற உணர்வு, வேலை செய்யும் ஊழியர்களுக்கு வரவேண்டும் மக்களுக்கு வரவேண்டும்.

அதற்கு ஒரு முன்னெடுப்பாக. அரசு துறைகளுக்கு பொதுமக்களால் அனுப்பப்படும், கோரிக்கைகள், புகார்கள், மனுக்கள், போன்றவற்றை,  இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

கோரிகைகளோ, புகார்களோ, மனுக்களோ, அதற்கு அரசு தரப்பில் தரப்படும் பதில்களும்  இங்கே பதிவேற்றம் செய்யப்படும்.  இதனால், எந்த மனு எவ்வளவு துரிதமாக அரசு நிர்வாகத்தால் கையாளப்பட்டது, எதற்கு  உடனுக்குடன்  பதில் அளிக்கப்பப்ட்டது, அல்லது நிவர்த்தி செய்யப்பட்டது, என்ற உண்மை பலருக்கும் தெரிய வரும்.

மேலும், லஞ்சமாக பணம் கொடுத்தவருக்கு விரைவாகவும், கொடுக்காதவருக்கு தாமதமாகவும் செய்யப்படும் அரசுடனான வேலைகள் அம்பலமாகும்.

அதனால், காரணமில்லாமல்  ஏற்படுத்தும் தாமதம், வேண்டுமென்றே ஏற்படுத்தும் தாமதம், அல்லது லஞ்சம் பெற வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தும் தாமதம், போன்றவைகள் மக்களுக்கு உடனுக்குடன் தெரியவரும்.

எனவே, அரசுடனான வேலைகளின்  குறை நிறைககளை  அம்பலபடுத்தும் போது, இந்த இணையதளம் மூலமாக, பொதுமக்கள் ஒரு கண்காணிப்பு குழுவாக மாறுவார்கள்.

இனி வரும் காலங்களில் பொதுமக்களுக்கும், அரசு துறைகளுக்கும் இடையேயான மனுக்கள், புகார்கள், கோரிக்கைகள், போன்றவை இங்கே அம்பலப்படுத்தப்படும் .

இந்த இணைய தளத்தின் மூலம், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், தங்கள் குறை நிறைகளை பதிவேற்றம் செய்யலாம். நன்றி.

தொகுப்பு / பதிவு.

திரு. MMY. ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

 

 

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »