RTI Meeting
RTI meeting announcement
RTI meeting announcement

அன்பார்ந்த நண்பர்களே, தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்களே.

புதுச்சேரி ஆர் டி ஐ குழுவும், புதுச்சேரி ஆர் டி ஐ செயல் பாட்டாளர் குழுவும்  இணைந்து, வரும் 23.12.2021 வியாழன் காலை 9:30 மணி முதல், மதியம் 1 மணி வரை. தகவல் பெறும் உரிமை ஆர்வலர்கள் கலந்தாய்வு கூட்டத்தை நடத்த உள்ளது.

புதுச்சேரியில் நிலவும்  தற்போதைய சூழலில், ஊழல் நிர்வாக சீர்கேடுகள்,  முறைகேடுகள், அதிகளவில் நடைபெறுகின்றன.

அவற்றை வெளிப்படுத்த வேண்டிய சமூக பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது.

நிர்வாக சீர்கேடுகளுக்கும், முறைகேடுகளுக்கும், ஊழலுக்கும், முக்கிய மானவர்கள் உயர் அதிகாரிகளே.

  • இவர்களை தட்டிகேட்க, நாம் மந்திரியாகவும் தேவையில்லை, சட்டமன்ற உறுப்பினராகவும் தேவையில்லை. மாறாக, தகவல் பெறும் உரிமை ஆர்வலராக இருந்தால் மட்டுமே போதும்.
  • மாநிலத்தை காப்பாற்ற, மாநில மக்களை காப்பாற்ற, மிகவும் உயரிய பதவி. தவறுகளை சுட்டி காட்டி, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையை பெற்றுத் தரக்கூடிய உயர் அதிகாரப் பதவி.
  • மக்கள் அதிகாரத்தின் மகத்தான ஆயுதம், இதனை பயன்படுத்தும் மன உறுதி கொண்டவர்களே

நாம் கண்டறியும் தகவல்கள், அதிகாரிகளை மையப்படுத்தியே இருக்க வேண்டும். அதன் படி சட்டத்தின் மூலம் தண்டனை பெற்று தர முடியும்.

மேலும், மாநில வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும்  குந்தகம் விளைவிக்கும் வகையிலும், முடக்கும் வகையிலும், மக்களின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன.

இவற்றை பாதுகாக்கும் வகையில்.

  • மாநில தகுதி.
  • நிதிப்பற்றாக்குறை.
  • உள்ளாட்சி தேர்தல்.
  • லோக் பால் சட்டம்.
  • தகவல் பெறும் உரிமை சட்ட தலைமை ஆணையர் அலுவலகம்.
  • சேவை பெறும் உரிமை சட்டம்.
  • அரசு காலிப் பணியிடங்களை நிரப்புதல்.
  • கூட்டுறவு ஆலோசனை குழு.

ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

எனவே, இந்த கூட்டத்தில், மாநில வளர்ச்சி மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, சமூக தகவல் பெறும் உரிமை ஆர்வலர்கள் அனைவருக்கும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி வணக்கம்.

அன்புடன் அழைக்கும்.

  • கோ ராமலிங்கம்.
    புதுச்சேரி ஆர் டி ஐ குழு.
    செல் 97895 45401.
  • டாக்டர் எம் செல்வ மணிகண்டன்.
    புதுச்சேரி ஆர் டி ஐ செயல் பாட்டாளர் குழு.
    செல் 93624 50382.

அனைவரும் தவறாமல் கலந்து கொள்வீர். சமூக கடமையாற்ற புதுச்சேரி மாநிலத்தையும் மாநில மக்களையும்  காப்பாற்ற, புத்தாண்டில் புதிய பாதையை நாம் காட்டுவோம்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம். புதுச்சேரி தமிழ் சங்கம

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »