ஒருநாள் நீங்கள் ஒன்று கூடினால், அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு காணலாம்.

இந்த அரசையோ, அதிகாரிகளையோ, எதிர்க்கட்சிகளையோ நம்பி, எந்த பலனும் இல்லை.

உங்களை நீங்கள் நம்புங்கள், அனைத்து கஷ்டங்களையும் அனுபவிப்பவர்கள்  நீங்களே.

குடும்பத்துடன் தெருவில் இறங்குங்கள்., உங்கள் பலம் உங்களுக்கு தெரியாதவரை, இந்த உலகம் உங்களை , அடிமையாக த்தான் வைத்து இருக்கும்.

  • 300 சர்க்கரை ஆலை ஊழியர்கள்.
  • 350 நூற்பாலை ஊழியர்கள்.
  • 100 பாண்டெக்ஸ் ஊழியர்கள்.
  • 300 கான்பெட் அமுதசுரபி ஊழியர்கள்.
  • 300 பாப்ஸ்கோ ஊழியர்கள்.
  • 400 பாசிக் ஊழியர்கள்.
  • 1200 கூட்டுறவு சங்க ஊழியர்கள்.
  • 400 பெருந்தலைவர் காமராஜர் விவசாய பண்ணை ஊழியர்கள்.

இப்படி பல அரசு சார்பு கூட்டுறவு ஊழியர்களுக்கு, பல வருடங்களாக சம்பளம் இல்லை. இந்த கொடுமை வேறு எங்கும் எந்த மாநிலத்திலும் இல்லை.

அரசாங்கமே அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை என்றால், அரசு ஊழியர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் சம்பளம் எதற்கு.

அவர்களுக்கு கொடுப்பதில், எங்களுக்கும் கொடு. எங்களுக்கு சம்பளம் இல்லை, அவர்களுக்கு மட்டும் ஏன் சம்பளம் வழங்க வேண்டும்?

5000 ஊழியர்கள் குடும்பத்துடன், தெருவில் இறங்கி உரிமை கோஷங்களை உரக்க எழுப்புங்கள். மக்களின் ஆதரவு நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். எங்களுக்கு சம்பளம் இல்லையேல் உங்களுக்கு சம்பளம் எதற்கு? என்ற கோஷம்… புதுச்சேரி தலைமையகத்தை நோக்கி, அணிதிரளட்டும், உங்களுக்கு உதவ உங்களைத் தவிர உதவ வேறு யாரும் இல்லை.

ஆம் ஆத்மி கட்சி சட்ட ரீதியான அனைத்து உதவிகளையும் உங்களுக்கு செய்யும், இப்போதே களத்தில் குடும்பத்தோடு இறங்குங்கள். உங்களின் கோரிக்கை கோஷம் விண்ணை பிளக் கட்டும்..

அதிகார வர்க்கம் அலறி அடித்து ஓடட்டும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு.

உண்மையான போராட்டங்களே இப்போதைய தேவை. டெல்லி விவசாயிகள் போராட்டம் போல, பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடினால், ஆட்சியையே மாற்றலாம்.

யானைக்கு அதன் பலம் தெரியாதவரை யானைப் பாகன் அதைப் பிச்சை எடுக்க வைப்பான், அதன் பலம் அதற்கு தெரிந்து விட்டால், மிரண்டு மதவெறி கொண்டால் முதல் பலி அந்த பாகனே.

பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு அதன் பலம் தெரியவில்லை. அதன் பலம் தெரிந்தால், இந்த ஆட்சியே இருக்காது.

 

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »