தானியங்கி குரல் ஒலி.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 4

மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டு, அவை தனித்தன்மையுடன் இயங்க கூடிய அதிகாரத்தை, இந்திய ஒன்றிய அரசு அளிக்கிறது.

காரணம், பொருளாதாரம்,அரசியல்,நிர்வாகம், ஆகியவற்றில் அவை முன்னேற்றம் அடைந்து இருப்பதால்,இந்த தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கிறது.

ஆனால், யூனியன் பிரதேசங்களுக்கு இந்த அதிகாரங்கள் இல்லை.
அவை பொருளாதாரம், அரசியல், நிர்வாகம், ஆகியவற்றில் மிகவும் பின் தங்கி இருப்பதால்.
மத்திய அரசின் நேரடி பார்வையில், நிதியுதவியுடன் இயங்குகின்றன.

இந்த பொருளாதாரம்,அரசியல், நிர்வாகம், ஆகியவற்றில் எப்போது நிலைத்தன்மை ஏற்படுகிறதோ, அப்போது, இதற்கு மாநில தகுதி கிடைத்து விடும்.
இதற்கான பணிகளை, இந்திய புள்ளியல் துறை கணக்கெடுப்பின்படி, மத்திய அரசு கண்காணிக்கும்.

இதில், வறுமைக் கோடு ஒழிப்பு, உள்நாட்டு உற்பத்தி, வரி வருவாய், மக்கள் தொகை, ஆகியன கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மத்திய உள்துறை அமைச்சர் தான் இந்த யூனியன் பிரதேசங்களுக்கு நிர்வாகியாக இருப்பார்.

நிதி ஆயோக் அமைப்பு, இந்த யூனியன் பிரதேசங்களுக்கான நிதியை ஒதுக்கும்.

இதில், புதுச்சேரிக்கு நிதி குறைவாக ஒதுக்கீடு செய்ய முக்கிய காரணம்.
அனைத்திலும், முதன்மை யூனியன் பிரதேசமாக வளர்ச்சியடைந்த யூனியன் பிரதேசமாக முதலிடத்தில் இருப்பதால்தான்.  வளர்ச்சி குறைவாக உள்ள  யூனியன் பிரதேசங்களுக்கு அதிக நிதி அளிக்கப்படுகிறது.

உதாரணமாக.

அந்தமான் நிக்கோபார் தீவு களுக்கு, 2016..2017 ம் ஆண்டில், 4087 கோடியும். முதலீடு தொகையாக 683.68 கோடி அளிக்க பட்டுள்ளது.

ஆனால் புதுச்சேரிக்கு, சுமார்.  1700 கோடி மட்டுமே அளிக்கிறது.

  • அந்தமான் மக்கள் தொகை. 351087.
  • பரப்பளவு. 8249 சதுர  கிமீ.
  • இதன் வரி வருவாய். 88.26 கோடி ரூபாய்,
  • வரி இல்லாத வருவாய்.  278.88 கோடி ரூபாய்.

அதாவது மத்திய அரசு இந்த யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான நிதியை அதிகளவு அளிக்கிறது.

புதுச்சேரி வளர்ச்சி அடைந்த யூனியன் பிரதேசமாக கருத்தில் கொள்வதோடு.

இது சட்டமன்றம் உள்ள யூனியனாக கருதி.
மிகக் குறைவான நிதியை தருகிறது.

ஒரு புறம் கடன் சுமை அதிகரிக்கவும்.
மறுபுறம் உள்நாட்டு உற்பத்தி குறையவும்.
மத்திய அரசின் நிதி குறையவும். கடும் நிதிப்பற்றாக்குறையில் புதுச்சேரி மாநிலம் தவிக்கிறது.

சட்டமன்றம் இல்லாத யூனியனாக அந்தமான் நிக்கோபார் தீவுகளை போல் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

இந்த நிதிப்பற்றாக்குறை என்பது திடீரென ஏற்படவில்லை.

1977 ல் இருந்து இது தோன்றியது.

அப்போதே இதற்கு வேகத்தடை போட்டு இருந்தால்.
இந்த அவலநிலை நமது மாநிலத்திற்கு ஏற்பட்டு இருக்காது.

புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க முற்பட்டது. தமிழக ஆளும் கட்சி….
அப்போது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு, பகுதி  5 க்கு, இங்கே சொடுக்கவும்.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம்.ஆத்மி.கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம்.ஆத்மி.கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »