தானியங்கி குரல் ஒலி.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 1.

புதுச்சேரி மண்.

புரட்சி மூலம் மலர்ந்த மண்.

வரலாறுகள் பல படைத்தது.

வீரம் விளைந்த மண்.

இப்போது சோரம் போய் கிடக்கிறது.

டில்லி சுல்தான்களுக்கு அடிமைப் பட்டு கிடக்கிறது.

இதை மீட்டு எடுக்க, இன்னொரு விடுதலை போராட்டம் தேவைபடுகிறது.

பாரதி தாசன், அரவிந்தர், மக்கள் தலைவர், வ. சுப்பையா, ஆகியோர் வாழ்ந்து மறைந்த மண்.

ஆசியாவிலேயே எட்டு மணி நேர வேலை, இங்கு தான் நடைபெற்றது.

இளைஞர்களே! இந்த புதுவையின் வரலாறை நீங்கள் அறிய வேண்டும்.

முதலில், புரட்சி கவிஞர் பாரதிதாசன், கவிதை யோடு இந்த பதிவை ஆரம்பிக்கிறேன்.

  • கொலை வாளினை எடடா, மிகு
    கொடியோர் செயல் அறவே.
  • குகை வாழ் புலியே, உயர் குணம்
    மேவிய தமிழா.
  • வலியோர், சிலர் எளியோர் தமை
    வதையே, புரிகுவதா.
  • மகராசர்கள், உலகாளுதல் நிலையாம், எனும் நினைவா.
  • உதவாதினி ஒரு தாமதம்,
    உடனே விழி தமிழா.

என்ற, புரட்சி கவிஞனின் புரட்சி வரிகளுடன்,
இந்த புதுச்சேரி வரலாற்று பதிவு ஆரம்பம்.

அன்பார்ந்த நண்பர்களே!

நான் தினந்தோறும் பல பதிவுகளை பதிவிட்டு வருகிறேன்.

இவை யாவுமே கற்பனை அல்ல, நடந்தவை.

இதில் மாற்றம் பெறவும், விழிப்புணர்வு பெறவும், மக்கள் வாழ்க்கையில் ஏற்றம் பெறவுமே இந்த பதிவுகள்.

நமது புதுச்சேரி மண்ணின் வரலாறு படிக்க படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

இதன் வரலாறு. விடுதலை வரலாறு.

யூனியன் பிரதேசமானது. அடிமை மாநிலமாக இருப்பது.

இதிலிருந்து விடுதலை பெறவே இத்தகைய விழிப்புணர்வு பதிவு.

பாண்டிச்சேரி வரலாறு.

  • கிபி. ஒன்றாம் நூற்றாண்டில், பாண்டிச்சேரியில் சுமார் 3.2 கிமீ. தொலைவில் உள்ள அரிக்க மேடு வில் வியாபார வர்த்தக மையம் நடைபெற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • கிபி. 4 ஆம்  நூற்றாண்டில், காஞ்சி பல்லவர்கள் ராஜ்யத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
  • கிபி. 10 ஆம் நூற்றாண்டில், சோழர்களும்,
  • கிபி 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களும்,
  • பிறகு விஜய நகர பேரரசர்களும்,
  • இறுதியாக, பிஜப்பூர் சுல்தானிடம் சென்றபோது, செஞ்சி ராஜ்யத்தில் ஒரு பகுதியாக இது இருந்தது.
  • 1674 ல் பிரெஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி வசம் சென்றது.
  • 1693 ல் டச்சு காரர்கள் வசம் சென்றது.
  • 1699 ல் பிரான்ஸ் வசம் சென்றது.
  • 1720, 1731. 1738 ஆண்டுகளில். காரைக்கால், மாஹே, ஏனாம், ஆகிய பகுதிகளை கைப்பற்றினர்.
  • 1742 முதல் 1763 வரை, அடிக்கடி கைமாறியது.
  • 1763 ல் பாரீஸ் உடன்படிக்கை படி பிரான்ஸ் வசம் சென்றது.
  • 1793 ல் மீண்டும் ஆங்கிலேயர் வசம் சென்றது.
  • 1814 ல் மீண்டும் பிரான்ஸ் இடமே திருப்பி தந்தனர்.
  • 1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்தாலும் பாண்டிச்சேரிக்கு சுதந்திரம் கிடைக்க வில்லை.

இதற்காக ஏழு ஆண்டுகால விடுதலை போராட்டம் நடந்தது.

  • 1954 ல் பிரெஞ்சு அரசு பாண்டிச்சேரியை ஒப்பந்தம் போட்டு ஒப்படைத்தது.
  • 1814 லில் இருந்து 1954 வரை பிரெஞ்சு அரசே நிர்வகித்தது.

இதன் ஐந்து பகுதிகளான பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹெ, ஏனாம், சந்திர நாகூர், ஆகிய பகுதிகள்.

இது பாண்டிச்சேரி யின் ஆரம்ப கால வரலாறு.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 2 க்கு   இங்கே சொடுக்கவும்.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம்.ஆத்மி.கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம்.ஆத்மி.கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »