Lokpal Bill

லோக்பால் அமைப்பு யார்மீதுள்ள புகார்களை விசாரிக்கலாம்?

லோக்பால் அமைப்பு கீழ்கண்டவர்கள் மேல் உள்ள ஊழல் புகார்களை விசாரிக்கலாம். அவை

  • பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்
  • மத்திய அமைச்சர்கள்
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள்
  • மத்திய அரசின் குரூப் ஏ,பி,சி,டி பிரிவு அதிகாரிகள்
  • அரசிற்கு தொடர்புடைய ஆணையங்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகளிலுள்ள தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
  • 10 லட்சத்திற்கு மேல் அன்னிய நாட்டிலிருந்து நிதியுதவி பெரும் அமைப்புகள்

லோக்பால் அமைப்பு என்றால் என்ன?

ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்க உருவாக்கப்பட்டது லோக்பால் அமைப்பு. இந்த அமைப்பு 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் அப்போது பதவியேற்றுகொண்டார். அவருடன் மற்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

புகார்கள் எவ்வாறு அளிக்கலாம்?

லோக்பால் அமைப்பில் ஊழல் புகார்களை யார் வேண்டுமானலும் அளிக்கலாம். இந்தப் புகார்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுடன் அளிக்கவேண்டும்.

அதன் முழு அதிகாரங்கள் என்ன? மற்றும் லோக்பால் அமைப்பில் புகார்கள் எவ்வாறு விசாரிக்கப்படும்?புகார்கள் விசாரிக்கப்படும் முறை?

லோக்பால் அமைப்பில் புகார்கள் அளிக்கப்பட்டவுடன் அந்த அமைப்பு புகாரில் தொடர்புடைய நபரிடம் விளக்கம் கேட்கும். அத்துடன் இந்தப் புகாரில் முகாந்திரம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகு முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடும். மேலும் இந்தப் புகார்கள் அரசு அதிகாரிகள் மீது இருந்தால் அவை மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »