1. அசல் களும், போலிகளும்.
  2. உண்மையும், பொய்யும்.
  3. குணமும், பணமும்.

இந்த மூன்று தான் இன்றைய உலகை ஆட்டிப் படைக்கிறது.

அசல் எது? போலி எது? என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

உண்மை எது? பொய் எது? என சரியாக தெரியவில்லை.

குணமா? பணமா? காட்டுகின்ற பாசத்தில் புரியவில்லை.

இப்படியே காலம் ஓடுகிறது.

அசல், உண்மை, குணம், ஆகியன.

இந்த போலி, பொய், பணம்,  ஆகியவற்றுக்கு அஞ்சி நடுங்கு கிறது.

இதற்கு என்ன தான் தீர்வு?

ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், கோரிக்கைகள்,  அறிக்கைகள், இவைகளை வைத்து சிலர் பிழைப்பு நடத்துகின்றனர்.

முடிவு என்ன?
காலதாமதம், சமரசம், பேரம், இது ஒரு போலித்தனம் நிறைந்தது.

எழுதுவது, பதிவு செய்வது, புள்ளி விவரங்களை அள்ளி வீசுவது, மக்கள் மத்தியில் பெரிய அறிவு ஜீவியாக காட்டிக் கொள்வது.

இதனால் தன்னை வளர்த்து கொள்வது, பிழைத்து கொள்வது.

அனைத்திலும் பணம் பணம், பணத்துடன் கலந்து இருக்கும் விஷம் கலந்த குணம்.

செய்திகள் போடுவதில் இருந்து, தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதில் இருந்து, தேர்தலுக்கு, வாக்குறுதிகள் கொடுத்து, தங்களை குணக்குன்றாக கான்பிப்பதோடு பணத்தையும் கொடுத்து வெற்றி பெற்று விடுகின்றனர்.

இப்படித்தான் போலியும், பணமும், பொய்யும் வெற்றி பெறுகின்றன.

இவற்றில் இருந்து, அசலும், உண்மையும், குணமும், செய்ய வேண்டியது என்ன?

  • முதலில், தியாகம் செய்ய தயாராக வேண்டும்.
  • எதையும் தாங்கும் மனம் வேண்டும்.
  • அச்சம் என்பதே இருக்க கூடாது.
  • எதிர்த்து நின்று போராடும் தைரியம் வேண்டும்.
  • ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை நடத்த வேண்டும்.
  • தன்னை, எந்த நேரத்திலும், தீக்குச்சி யாகவும், மெழுகுவர்த்தி யாகவும், எரிய தயாராக வேண்டும்.

சான்றோர் ஆன்றோர் வழியில் வந்தவர்கள் நம் மக்கள்.

அவர்களுடைய அறிவுரைகள்,  அறவுரைகள், வழிமுறைகள், நமது ஜீனில் பதிந்து போனவை.

நல்லவற்றை ஆதரிக்கும் குணம், ஆற்று வெள்ளம் போல பெருக்கெடுக்கும்.

அப்படி பெருக்கெடுக்கும் போது, போலி, பொய், பணம், அடித்து சென்று விடும்.

இதற்கு கடுமையான உழைப்பு என்பது, களத்தில் இறங்கி உண்மையாக செயல்படுவது.

எதையும் எதிர்பாராமல்திட்டமிட்டு, போலி, பொய், பணம் செய்யும் செயல்களை அம்பலப்படுத்துவது.

நூறு பேர் இருந்தால் கூட போதும், இத்தகைய அம்சங்களை பின்பற்றி நடக்க.

போலி, பொய், பணம், இல்லாமல் மாநிலத்தையே மாற்றிவிடலாம்.

இது ஒரு விழிப்புணர்வு பதிவு.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »