புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்,

  1. புதுச்சேரி நகராட்சி,
  2. உழவர்கரை நகராட்சி,
  3. காரைக்கால் நகராட்சி,
  4. மாகி (மாஹே) நகராட்சி,
  5. ஏனாம் நகராட்சி,

என ஐந்து நகராட்சிகள் உள்ளன.

  • 117 நகராட்சி வார்டுகளும்,
  • 108 கிராம பஞ்சாயத்துகளும்,
  • 108 பஞ்சாயத்து கவுன்சிலர்களும்,
  • 810 கிராம வார்டுகளும் உள்ளன.

அதில் ,

  • புதுச்சேரி 81 பஞ்சாயத்துகளும் ,
  • காரைக்கால் 27 பஞ்சாயத்துகளும்,

செயல்படுகின்றன.

வாக்காளர்களை பொறுத்தவரை,

  • வார்டுகளில் 6500 வாக்காளர்களும்,
  • பஞ்சாயத்துக்களில் 2500 வாக்காளர்களும்,
  • பஞ்சாயத்து வார்டுகளில் 600 வாக்காளர்களும்

சராசரியாக உள்ளனர்.

நகராட்சி தேர்தல் ஓட்டலிப்பை பொறுத்தவரை,

  1. நகராட்சி தலைவர்,
  2. வார்டு கவுன்சிலர்

என இரண்டு ஓட்டுகளும்,

பஞ்சாயத்து தேர்தல் ஓட்டலிப்பை பொறுத்தவரை,

  1. பஞ்சாயத்து தலைவர்,
  2. பஞ்சாயத்து கவுன்சிலர,
  3. வார்டு உறுப்பினர்,

என மூன்று ஓட்டுகளும் போட வேண்டும்.

இதுதான் நமது புதுச்சேரி மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்பு.

  • இளைஞர்களே, சமூகப் பணிக்கு உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள்.
  • உங்களால்தான் முடியும், உங்களால் மட்டுமே முடியும். என நம்புங்கள்.
  • கறைபடிந்த இந்த ஊழல் சாம்ராஜ்யத்தையும், பணநாயகத்தையும்,  மக்களை விலைக்கு வாங்கும் கூட்டத்தையும்  விரட்ட உங்களால் மட்டுமே முடியும்.
  • நகர வார்டுக்கும், கிராம பஞ்சாயத்துக்கும், சுமார் பத்து பத்து இளைஞர்களும், இளம் பெண்களும்  தயாராகுங்கள்.
  • நீங்கள் செய்ய வேண்டிய முதன்மை பணி.
  • பத்து பேர் கொண்ட கண்காணிப்பு குழு.
  • அதற்கு தலைவர் அவர்தான் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு போட்டியிடுவார்.
  • நகர வார்டு மற்றும் கிராமங்களை பற்றிய முழு ஆய்வு அவசியம்.
  • அடிப்படை வசதிகளின் தற்போதைய நிலை. முக்கியமாக,
  • அரசு பள்ளி,
  • மருத்துவ மனை,
  • குடிநீர்,
  • கோவில் நிர்வாகம்,
  • கிராம நிர்வாக அலுவலர் பணி,
  • அரசுக்கு சொந்தமான இடங்கள்,
  • ஏரிகள்,
  • குளங்கள்,
  • வாய்க்கால்கள்.

இவற்றின் தற்போதைய நிலை பற்றி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெறுங்கள்.

  • ஐந்து தட்டிகள் மக்கள் கூடும் இடங்களில் வைத்து, கிராமத்தின் பிரச்னைகளை மக்களுக்கு தெரிவியுங்கள்.
  • தங்களையும் தங்கள் கிராமத்தையும்  காப்பாற்ற இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது, என்ற நம்பிக்கை விதையை மக்கள் மனதில் வையுங்கள்.
  • தேர்தலில் நிச்சயம் உங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைப்பதோடு, வெற்றியும் நிச்சயம்.
  • நீங்கள் எதிர்த்து நிற்பது பணமுதலைகளை.
  • இவர்களை எதிர்த்து நிற்க பணம் தேவையில்லை.
  • மக்கள் பலமும், மனதில் உறுதியும், நேர்மையும் மட்டும் இருந்தால் போதும்,  நல்லவர்கள் உங்களுக்கு நிதியை அள்ளித் தருவார்கள்.
  • உங்களுக்கு வழிகாட்ட துணிச்சலான, பேராண்மை மிக்க பேராற்றல் கொண்ட, ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சி.. உறுதுணையாக இருக்கும்.
  • இப்போதே களம் இறங்குவீர்.
  • கிராமம் தோறும் கண்காணிப்பு குழுக்கள் வைத்து கண்காணிக்க துவங்குங்கள்.
  • துடைப்பத்தை கையில் எடுப்போம், நாட்டையும் வீட்டையும் சுத்தப்படுத்த கையில் எடுப்போம் துடைப்பத்தை.
  • ஓட ஓட விரட்டுவோம், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் ஊழல் கட்சிகளை.
  • இந்தியாவிலேயே, முதன்மை நகராட்சிகளாக புதுச்சேரி நகராட்சி  பஞ்சாயத்துக்களை கொண்டு வருவோம்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் நகராட்சி, மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர்கள்  பணி என்ன?

ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று நகராட்சி உறுப்பினர் ஆனால் என்ன பணிகளெல்லாம் அவரால் செய்யமுடியும் ?

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் விபரமாக:

🎯 பொது சுகாதாரம் – துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை.

🎯 மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு.

🎯 குடிநீர் வழங்கல்.

🎯 தெரு விளக்கு வசதி மற்றும் கல்வி மேம்பாடு.

🎯 கட்டிடங்கள் மற்றும் கட்டுவதை ஒழுங்கு செய்தல்.

🎯 தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல்.

🎯 பிறப்பு / இறப்பு பதிவு.

🎯 மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல்.

🎯 சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.

🎯 பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு.

🎯 மத்திய , மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துதல்.

🎯 இன்னும் பல.

இதற்கான வருவாய் ஆதாரங்கள்:

🏷️சொத்து வரி.
🏷️தொழில் வரி.
🏷️கேளிக்கை வரி.
🏷️விளம்பர வரி.
🏷️பயனீட்டாளர் கட்டணம்.
🏷️நிறுவனத்தின் மீதான வரி.
🏷️நுழைவு வரி.
🏷️வணிக வளாகங்கள் வாடகை.
🏷️பூங்காங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வருவாய்.
🏷️அரசு மானியம்.
🏷️மாநில நிதி பகிர்வு.
🏷️ மத்திய அரசின் திட்டங்கள் மூலமான நிதிகள்.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும், நகராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லோருக்கும் பொருந்தும், அவர் ஆளும் கட்சியா, எதிர் கட்சியா இல்லை சுயேச்சை வேட்பாளரா? என்ற கேள்விக்கு இடம் இல்லை.

உண்மையான மக்கள் நலம் விரும்பும் ஒரு வார்டு கவுன்சிலர், தனது வார்டுக்கு மட்டுமன்றி, ஒட்டு மொத்த நகராட்சியின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பணியாற்ற முடியும்!

நகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து தனது சுய விருப்பு வெறுப்புகளை களைந்து ஊரின் வளர்ச்சிக்கு கிராம வளர்ச்சிக்கும், வார்டு மக்களின் நலனுக்கும் துணை நிற்பதே உண்மையான மக்களின் சேவகர்.

ஆளும் கட்சி வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளரும் வார்டு மக்களால் நேரடியாக வாக்களித்துதான் தேர்வு செய்யப்படுகிறார்.

தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர், நகராட்சி தலைவரால் பதவிப்பிரமாணம் செய்யப்பட்டு பதவி ஏற்கிறார். அது முதல் அவர்களது பணி தொடங்குகிறது. வேறெந்த வேற்றுமையும் அவர்களுக்கிடையே இல்லை!

  • உங்கள் தெருவில் நிற்கும் வேட்பாளர் களப்பணி செய்பவரா?
  • நீங்க நினைத்த நேரத்தில் அவரை அணுக முடியுமா?
  • பெரியண்ணன் மனப்பான்மை இல்லாத, சகோதர குணம் உடையவரா?
  • கறை படியாத கரங்களுக்கு சொந்தகாரரா?
  • உங்கள் பகுதி கோரிக்கைகளை நகர மன்றத்தில் உரக்க சொல்லக் கூடிய தகுதி உடையவரா?
  • விபரமானவரா?

எனப் பார்த்து வாக்களிக்களித்தால் மட்டுமே நம் தேவைகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிறைவேறும் !!!

சிந்திப்போம்! வாக்களிப்போம்!👆

அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்.

வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக உரிமை.

சுய பரிசோதனை தேர்வுக்கு : இங்கே சொடுக்கவும்.

 

தொகுப்பு:

கோ ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்
ஆம் ஆத்மி கட்சி..
புதுச்சேரி.

பதிவு:

Hamid Incharges

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »