2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தனது கட்சி தயாராக உள்ள நிலையில், பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று மூத்த தலைவர் சிதம்பரம் கூறினார்.

பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி தலைமையின் கீழ் இருக்கக்கூட காங்கிரஸ் விரும்புவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய தேர்தல் தோல்விகளுக்கு காந்தி குடும்பம் மட்டுமே பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் ஜி-23 கூட்டத்திற்கு பிறகு தனியார் ஆங்கில டிவிக்கு சிதம்பரம் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், “5 மாநில தேர்தல் தோல்விக்கு பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பதவி விலக முன்வந்தனர். ஆனால் அதை காங்கிரஸ் கமிட்டி ஏற்கவில்லை. எனவே,  புதிய காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை நாம் விரைவுபடுத்த வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாதம்தான் அது நடக்கும். அதுவரை சோனியா காந்தி தலைமை தாங்குவார் என்று நான் உட்பட அனைவரும் நம்புகிறோம்.
சோனியா காந்தி தேர்தலை முன்னெடுக்க பரிந்துரைத்தார். ஆனால் பெரும்பாலான தலைவர்கள் ஏற்கவில்லை. கபில் சிபல் போன்ற “ஜி-23” தலைவர்கள் தேர்தலில் தோல்வியடைந்த கட்சிக்கு புத்துயிர் அளிக்க புதிய தலைமைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.

சமீபத்திய தோல்விகளுக்கு காந்தி குடும்பத்தினரை மட்டுமே குற்றம் சொல்ல வேண்டும் என்று சொல்வது தவறு. நான் கோவாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது போல காந்தி குடும்பத்தினர் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் மற்ற மாநிலங்களுக்கு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். பொறுப்பில் இருந்து யாரும் ஓடுவதில்லை. ஆனால் தொகுதி, மாவட்டம், மாநிலம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டத்தில் தலைமைப் பதவியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் நாங்கள் முழுநேர தலைமைத்துவத்தைப் பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இப்போது முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் கட்சி அமைப்பில் தேவையான மற்றும் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்வதே நாம் செய்யக்கூடியது. சோனியா காந்தி அதைச் செய்கிறார் என்று நான் நம்புகிறேன்.

அதுவரை கட்சியின் பிளவு ஏற்படாது என்று நம்புகிறேன். கட்சியை பிளவுபடுத்த வேண்டாம் என்பதே ஜி23 தலைவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் ஆகும். எனது மற்றொரு வேண்டுகோள் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதுதான். அனைவரும் திரும்பிச் சென்று கட்சிப் பிரிவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்” என்றார்

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தனது கட்சி தயாராக உள்ள நிலையில், பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று மூத்த தலைவர் சிதம்பரம் கூறினார்.

“ஒவ்வொரு கட்சியும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இது மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பொருந்தும். மாநிலம் வாரியாக போராட்டம் இருக்கும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் தலைமையில் போராட வேண்டும். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து போராட வேண்டும். தலைவராக, மாநிலம் வாரியாக பாஜகவை எதிர்த்துப் போராடினால், அதைத் தோற்கடிக்க முடியும். பல மாநிலங்களில் காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. தொகுதி கமிட்டிகளை கலைத்துவிட்டு மீண்டும் அமைக்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் பல ஆண்டுகளாக கட்சி வறண்டு கிடப்பதை நாம் அனைவரும் அறிவோம். முதலில் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும், அதன் பிறகு தேர்தலில் போட்டியிட வேண்டும். இதுதொடர்பாக நான் தலைமைக்கு எடுத்துரைத்துள்ளேன்.

கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் போன்றோர் சுட்டிக்காட்டியதை நான் சுட்டிக் காட்டினேன். பல்வேறு இடங்களில் தலைவர்கள் இல்லை, தொண்டர்கள் மட்டுமே உள்ளனர். அரசியல் ஆர்வம், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நாட்டம் உள்ள தலைவர்களை அடையாளம் காண வேண்டும். கட்சிக்கு 24/7 உழைக்கும் தலைவர்கள் தேவை. 40, 50 மற்றும் 60 வயதுகளில் உள்ளவர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அவர்கள் தொகுதி அளவில் முழுநேரமாக இருக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு பணம் தேவைப்படும். முழு நேரப் பணியாளர்கள், முழுநேர அலுவலகப் பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.

Source: https://tamil.abplive.com/news/india/congress-willing-to-be-junior-partner-in-alliance-with-aam-aadmi-party-p-chidambaram-44554

புதுடெல்லி: வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த தேவைப்பட்டால் ஆம் ஆத்மி தலைமையையும் காங்கிரஸ் ஏற்கும் எனக் கூறியுள்ளார் காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். இந்நிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர் தேர்தல், காங்கிரஸின் பலவீனம், காங்கிரஸ் செய்ய வேண்டிய மீள் கட்டமைப்புப் பணிகள் எனப் பலவற்றையும் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். ஜி 23 என்ற காங்கிரஸின் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில் சிதம்பரத்தின் பேட்டி கவனம் பெறுகிறது.

அந்தப் பேட்டியில் ப.சிதம்பரம், “5 மாநில தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலக சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி முன்வந்தனர். ஆனால், காங்கிரஸ் காரிய கமிட்டி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிரந்தரத் தலைமையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே காரிய கமிட்டியின் விருப்பமும் கூட. அந்தத் தேர்தல் நடைபெற அதிகபட்சம் ஆகஸ்ட் வரை ஆகலாம். அதுவரை என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியமானது. அதுவரை சோனியா காந்தி தலைமையில் தான் நாங்கள் பணியாற்றப் போகிறோம். ஜி 23 தலைவர்கள் காந்தி குடும்பத்தினர் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். என்னைப் பொறுத்த வரை காந்தி குடும்பத்தினரை மட்டுமே தேர்தல் தோல்விக்குக் கைகாட்டுவது சரியல்ல. அவர்கள் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இங்கு யாருமே பொறுப்பைத் தட்டிக் கழிக்கவில்லை. ஆனால் பொறுப்பு என்பது சோனியா, பிரியங்கா, ராகுல் மீது மட்டுமில்லை ஒவ்வொரு மாநிலம், மாவட்டம், வட்டம் என அனைத்து காங்கிரஸ் உறுப்பினர் மீது உள்ளது. அதனால் இந்தத் தேர்தல் தோல்விக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் மட்டுமே பொறுப்பாகாது. இப்போதே நிரந்தரத் தலைவரை அறிவிக்கக் கோருகிறார்கள். நாங்கள் ஆகஸ்டில் தேர்தல் நடத்தி அறிவிப்போம் என்கிறோம். ஆகஸ்டில் கட்சிக்கு நிரந்தரத் தலைமை கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆகையால் இப்போது முதல் ஆகஸ்ட் வரை காங்கிரஸ் கட்சியில் விரிவான சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டும். அதற்குள் கட்சியில் பிளவு ஏதும் ஏற்படாது என்று நான் நம்புகிறேன். ஜி 23 தலைவர்களிடம் கட்சியை பிளவு செய்துவிட வேண்டாம் என்றும் நான் கோரிக்கை வைக்கிறேன்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் நிச்சயமாக சில விஷயங்களில் இறுக்கத்தைத் தளர்த்தி வளைந்து நெளிந்து கொடுத்தே போக வேண்டும். இது மம்தாவுக்கும் கேஜ்ரிவாலுக்கும் கூட பொருந்தும். ஒவ்வொரு மாநில வாரியாக பாஜக எதிர்ப்பு அணியை வலுப்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுடன் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டியுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையின் கீழ் நாங்கள் பாஜகவை எதிர்க்கத் தயாராக உள்ளோம். இது மாதிரி ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்ப்பை வலுப்படுத்தினால் பாஜகவை வீழ்த்துவது எளிதாகும்.

காங்கிரஸின் பலவீனமாக நான் பார்ப்பது மாநில அளவிலான பலவீனங்களே. நிறைய மாநிலங்களில் காங்கிரஸ் சிதிலமடைந்துள்ளது. அங்கெல்லாம் காங்கிரஸ் கமிட்டிகளை கலைத்துவிட்டு முழுமையாக புதியதாக வட்ட அளவிலிருந்து கட்சியைக் கட்டமைக்க வேண்டும். இந்த அமைப்பு சார்ந்த பலவீனத்தை நான் தலைமையிடம் எடுத்துரைத்துள்ளேன். இதையே ஜி 23யின் குலாம் நபி ஆசாத்தும், கபில் சிபலும் கூட வலியுறுத்துகின்றனர்.

நிறைய இடங்களில் காங்கிரஸுக்கு தலைவர்களே இல்லை. வெறும் தொண்டர்கள் தான் இருக்கின்றனர். அரசியலில் ஈடுபாடு கொண்ட, தேர்தல் அரசியலில் ஈடுபடும் நேர்த்தி கொண்ட தலைவர்களை அடையாளம் கண்டு கட்சிப் பொறுப்புகளில் அமர்த்த வேண்டும். அனைத்து மாநிலங்களில் கட்சிக்காக 24/7 நேரம் உழைக்கும் தலைவர்கள் வேண்டும். மிக முக்கியமான அவர்கள் 40, 50 அதிகபட்சமாக 60 வயதைத் தாண்டாதவர்களாக இருக்க வேண்டும். அதே போல் வட்ட அளவிலிருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றால் கட்சி கட்டமைப்புப் பணிக்காக நிதி ஆதாரம் வேண்டும். எல்லா இடங்களுக்கும் நிதி சென்று சேர்ந்தால் தான் மீள் கட்டமைப்பு சாத்தியமாகும்” என்றார்.

Source: https://www.hindutamil.in/news/india/778757-congress-willing-to-be-junior-partner-in-alliance-with-aap-p-chidambaram-1.html

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »